கவிக்குயில்கள்: இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்

S

இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்

இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

நாள் முழுதும் கணினித் திரையில் கண்பதித்து
தொலைத்துவிட்ட வாழ்வை கொடுங்கள் - அன்று
அம்மாவின் மடியில் படுத்துறங்கிய
எத்தனையோ ராத்திரிகள்!!

தாத்தாவின் தோள் மேலேறி கண்ட திருவிழாக்கள்!!
மணல் வீடு கட்டி விளையாடிய நாட்கள்!!
வேண்ட வெறுப்புடன் புத்தக மூட்டை சுமந்த
பள்ளி தருணங்கள்!! - இன்றும் நம் கால்தடம்
மறையாத கல்லூரிச் சாலைகள்...!!!

இவை எல்லாம் தூக்கி எரிந்து இயந்திர வாழ்வில்
குடி புகுந்தோம்...சொந்தங்களை மறந்த தொலைதூர
பயணம் தாண்டிய வேலை!!!

தொலைபேசியில் அம்மாவின் குரல் கேட்டுத்தான்
ஆறுதல் அடைய வேண்டுமா?
இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்!!
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment