கவிக்குயில்கள்: July 2010

S

இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்

இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

நாள் முழுதும் கணினித் திரையில் கண்பதித்து
தொலைத்துவிட்ட வாழ்வை கொடுங்கள் - அன்று
அம்மாவின் மடியில் படுத்துறங்கிய
எத்தனையோ ராத்திரிகள்!!

தாத்தாவின் தோள் மேலேறி கண்ட திருவிழாக்கள்!!
மணல் வீடு கட்டி விளையாடிய நாட்கள்!!
வேண்ட வெறுப்புடன் புத்தக மூட்டை சுமந்த
பள்ளி தருணங்கள்!! - இன்றும் நம் கால்தடம்
மறையாத கல்லூரிச் சாலைகள்...!!!

இவை எல்லாம் தூக்கி எரிந்து இயந்திர வாழ்வில்
குடி புகுந்தோம்...சொந்தங்களை மறந்த தொலைதூர
பயணம் தாண்டிய வேலை!!!

தொலைபேசியில் அம்மாவின் குரல் கேட்டுத்தான்
ஆறுதல் அடைய வேண்டுமா?
இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்!!
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

வளர்ச்சி!!

வளர்ந்து விட்ட வின்ஞானம் மறந்து போன
மெய்ஞானம் நம்மில் இன்று கற்பனைக்கு
எட்டாத வளர்ச்சி!!

படுக்கையறை காட்சிகள் 70 MM வெள்ளித்திரையில்
..ம்..ம்..நல்ல வளர்ச்சி - டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாரும் இல்லை!! கம்பனையும்
ஓரம் கட்டிய கற்பனை வளர்ச்சி!!

கம்பனுக்கும் பாரதிக்கும் அன்றில்லாத ரசிகர் மன்றம்
குப்பனுக்கும் சுப்பனுக்கும் இன்று உண்டு ..ம்..ம்..
நல்ல வளர்ச்சி!!!

சின்னத்திரையில் நீயாட நானாட நம்மை பார்த்து
எதிர்கால இந்தியா திண்டாட - இந்நிலை நீண்டால்
2020 கலாம் கண்ட கனவு?! - அவர் விழித்துக்கொண்டு
கனவு கானுங்கள் என்றார்!!

இன்னும் மூடிய விழிகளை திறக்காத இளையவர்களே
எழுந்திருங்கள் வல்லரசாக வாழ அடி எடுங்கள் - அந்த
இளைஞனின் கனவு நனவாகட்டும்!!!

!அழகு!

உதடுகளில் உண்மையும்!

கண்களில் நம்பிகையும்!

முகத்தில் புன்னகையும்!

கைகளில் உதவியும்!

உள்ளத்தில் அன்பும் மனிதனுக்கு

உண்மையான அழகு!

மறவாது கண்மணியே!!

உயிரானவள் சென்றுவிட்டாள்...என்
உயிரை கொன்று தின்று விட்டாள்....
உயிர் இல்லாத இதயத்தை காதலித்தேன்...

எனக்கு உறக்கம் இல்லாத ராத்திரிகளை
பரிசளித்தாய் - மறந்து விடு என்றுரைத்தாய்...
நானோ உன் உடலை நேசித்திருந்தால் நொடிப்பொழுதில்
மறந்திருப்பேன்...உன் உள்ளத்தை நேசித்தேன்...

நம் காதலை மறக்க முடிய வில்லை....இன்று நீ எங்கோ,
யாருடனோ வாழ்ந்தாலும் என்றும்
உண்மை காதல் மறவாது கண்மணியே!!

எப்பொழுதாவது என்னை நினைத்து பார்... உன் கண்களில் வடியும் ஒரு துளி கண்ணீர் சொல்லும் என் காதலை!!!

இறைவன் எங்கே!!

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
தூக்கியெரிந்த சுனாமி அலையின் கொடூரத் தாண்டவம்
தடுக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

வாய் பிழந்த பூமிக்குள்ளே புதையுண்ட உயிரை
காக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

நெருப்புக்கு இறையாகி அடுப்புக்கரியான பிஞ்சு குழந்தைகளை
அணைக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
இந்த அவலங்களை காண அவருக்கு கண் இல்லையா?

அவலக்குரல் கேட்க அவருக்கு காதில்லையா? - இல்லை
தொட்டுத் துலங்காத படையல் அருந்தி உறங்கி ஓய்வெடுகின்றாரா?

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!

மழை

மாலை நேர பூஞ்சோலையில் தோகை இலமயில்கள்
ஆடக்கண்டேன்...அன்னார்ந்து வானம் பார்க்க - கருத்த
மேகங்கள் மழை பொழிய காத்திருக்க கண்டேன்...!

அதோ....காற்றோடு விளையாடி கற்பனையில் கவி
பாடி கண் எதிரே தோன்றிய மழை
வந்துவிட்டதே...
என் உடல் நனைந்ததே உள்ளம் குளிர்ந்ததே!
இறை தேடியலைந்த பறவை கூட்டமும், தன் உறவோடு அசைந்தாடிய மயில்களும் தம் உறைவிடம் தேடிய வேலை....

இந்த அழகிய பூ மழையில் நனைந்தனவே
நானும் நனைகின்றேன் இன்னமும் கொஞ்சம் வான் மழையின்
கடைசித்துளி வரையில் நானும் நனைகின்றேன்...

நட்ப்புக்காக....

நண்பனுக்கு ஒரு செய்தி சொல்ல
தேர்ந்தெடுத்த நாள் இன்று.
நன்றெனப் பிறந்தாய்
இன்று வரை நிலைத்தாய்....

நாளையும் உனக்காக தான் - இன்று வரை
நீ சாதித்தது யாதென்றால்...இறைவன்
உனக்களித்த சோதனைகளை தாண்டி வந்து
அகவை இருபத்தி மூன்றென

அடியெடுத்து வைத்தாயே அதுவன்றோ. - மேலும்
நீ பிறந்தது சாதனை, எங்கள்
நெஞ்சில் நிறைந்தது சாதனை...

இன்றைய நாள் புதிதாய் தொடங்கட்டும்
இனி ஒரு விதி செய் உனக்கென்று வழி பிறக்கும்..
தோழ் கொடுக்க நாங்கள் உண்டு. - உன்
தோழமை சிறந்து நீ வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துகளுடன் கவிக்குயில்கள்....

அடே நண்பா

நெஞ்சுக்குள் இருக்கும் இன்பம்,
இதயத்தில் இடியாத இமயம்,
காற்றில் கறையாத பனிமலை,
கண்ணில் தெரியும் காவியம்,
கற்பனைக்கு எட்டாத ஓவியம்,
என்றும் அது,
நண்பா உன் நட்பு மட்டுமே..!

!....பாரதி....!

வான் புகழ் கொண்ட வள்ளோன் கவிபாடும்
வல்லமை கொண்ட கலைஞன்
இவன் பாடும் குரல் கேட்டு
மலைத்து நிற்கும் அலைகளெல்லாம்!

தமிழ் சொற்களை கவிச் சிற்பமாய்
செதுக்கிய சிற்பியாவான் - நீண்ட நெடு
வானமும் அளவில்லா வையகமும் மறந்திடா
நிலைகொண்டு மறைந்திட்ட கவிச்செம்மல்...

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வார்த்தையால்
வாழும் நெறி வகுத்த வள்ளுவனோடு இவன் ஒப்பாவான்
தொற்றனை தூறும் மணற்கேணி இவனை
கற்றவற் கூறும் அறிவுக்கேணி - அத்தகையவன்

அமர கவி எனும் பாரதியென்ற கவிஞன் ஆவான்
இவ்வையகத்தில் இவனை போல யாரும் இல்லை
இனியெவரும் இங்கு பிறப்பதற்கில்லை.....!

கால் கொலுசு

அவள் கொலுசின் இசை கேட்டு
எப்பொழுதாவது  துடிக்கும் என் இதயம்...!

என் மனம் விழுந்து கிடப்பது இந்த  இசையில்
தானே....!

அவள் பிரிந்து சென்றதில் இருந்து
அதுவும் இல்லை....!

யாரோ ஒருவரின்  கொலுசின் சத்தம் கேட்கும் பொழுது  வளின் நினைவுகளால்...எப்பொழுதாவது துடிக்கும் என் இதயம்...!

அம்மா....!

பிறக்கும் போது நானும் அழுது

அவளயும் அழ வைத்து - காரணம்
இல்லாமல் அன்பை சுமந்து
என் கட்டுடல்
வளர்த்து கருத்துடன் என்னை
காப்பவள் என் அன்னை
அவளுக்கு என்ன செய்தேன் -

நான் நொடிக்கு ஒருமுறை
'அம்மா' என்று  அழைத்ததை தவிர...
அவளும் எதிர்பார்க்க வில்லை.

ஓ...அவள் தானே அம்மா....!

அழுகின்றேன்

நீ அருகில் இருக்கும் போதெலாம்
காரணம் இல்லாமல் நான்
அழுகின்றேன் உன் விரல்கள்
என் கண்ணீர் துடைக்கும்
என்பதனால்...!

When i am with you

எழுந்து நட

விதி என்று எழுதி வைத்த
ஒன்றை மதி கொண்டு
வெல்வோம்...எழுந்து நட
நண்பா வெற்றி உனதாகட்டும்..!

நினைவுகள்

நிஜத்தை போலாவே நிழலும்
சுகமானது..!
உன்னை போலவே உன் நினைவுகளும்
சுகமானது...!
நீ அருகில் இல்லை என்றாலும் உன்
நினைவுகள்
என்றும் என்னிடம் இருக்கும்...!

தவம்



நினைத்துக் கொண்டு இருப்பேன் என்று நீ நினைக்காதே....
இன்னும் உன்னை மறக்கவில்லை...நினைப்பதற்கு!...

உறக்கம் இல்லாத இரவுகளை கடந்து வந்து...பழகிபோனேன்..
உணவு இல்லாத உடலுடன் வாழ பழகிபோனேன்...
          உன்னை மறந்து வாழ முயற்சி செய்தேன்....முடிய வில்லை
          தோற்றுப் போனேன்... விட்டு போனது காதலி மட்டும்தான் என் காதல் 
          என்னை விட்டு போகவில்லை...
இருந்தாலும் அந்த வலியை ஏற்றுக் கொள்கின்றேன்... விடியும்
வரை காத்திரு...விதைதவள் நீ உறங்கி விடலாம்அந்த விதை என்னுள் உறங்காது...!

புது வசந்தம்

இன்று புது வசந்தம்
வசந்தங்கள் பிறந்தது இன்று
புது வாழ்வு தொடங்குது நன்று...!
வண்ண வண்ண பூக்கள் மலர்ந்ததே
சித்திரை மகள் பிறந்தது கண்டு...!

எம் மனம் மகிழந்தது தமிழா
உன் வாழ்வு சிறந்தது கண்டு...!
உங்கள் வாழ்வும் வளமும் என்றும்
வசந்த மலர்கள் மலர்ந்து - வளம் பெற
வாழ்த்துகள்...!
கவிக்குயில்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....