கவிக்குயில்கள்: !....பாரதி....!

S

!....பாரதி....!

வான் புகழ் கொண்ட வள்ளோன் கவிபாடும்
வல்லமை கொண்ட கலைஞன்
இவன் பாடும் குரல் கேட்டு
மலைத்து நிற்கும் அலைகளெல்லாம்!

தமிழ் சொற்களை கவிச் சிற்பமாய்
செதுக்கிய சிற்பியாவான் - நீண்ட நெடு
வானமும் அளவில்லா வையகமும் மறந்திடா
நிலைகொண்டு மறைந்திட்ட கவிச்செம்மல்...

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வார்த்தையால்
வாழும் நெறி வகுத்த வள்ளுவனோடு இவன் ஒப்பாவான்
தொற்றனை தூறும் மணற்கேணி இவனை
கற்றவற் கூறும் அறிவுக்கேணி - அத்தகையவன்

அமர கவி எனும் பாரதியென்ற கவிஞன் ஆவான்
இவ்வையகத்தில் இவனை போல யாரும் இல்லை
இனியெவரும் இங்கு பிறப்பதற்கில்லை.....!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment