வான் புகழ் கொண்ட வள்ளோன் கவிபாடும்
வல்லமை கொண்ட கலைஞன்
இவன் பாடும் குரல் கேட்டு
மலைத்து நிற்கும் அலைகளெல்லாம்!
தமிழ் சொற்களை கவிச் சிற்பமாய்
செதுக்கிய சிற்பியாவான் - நீண்ட நெடு
வானமும் அளவில்லா வையகமும் மறந்திடா
நிலைகொண்டு மறைந்திட்ட கவிச்செம்மல்...
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வார்த்தையால்
வாழும் நெறி வகுத்த வள்ளுவனோடு இவன் ஒப்பாவான்
தொற்றனை தூறும் மணற்கேணி இவனை
கற்றவற் கூறும் அறிவுக்கேணி - அத்தகையவன்
அமர கவி எனும் பாரதியென்ற கவிஞன் ஆவான்
இவ்வையகத்தில் இவனை போல யாரும் இல்லை
இனியெவரும் இங்கு பிறப்பதற்கில்லை.....!
0 comments:
Post a Comment