மனமுவந்து என்னை அவள் மணமுடித்திருந்தாள்
அவள் பாதங்களை என் கரங்களால்
தாங்கியிருப்பேன்....
கருமேக கூந்தல் தலைதுவட்டி மலர்சூடி
மகிழ்ந்திருப்பேன்...!வேண்டிய பொருள் நினைக்கும் போதே
கொடித்திருபேன்...!
கட்டிய சேலை கசங்காமல்
அனைத்திருப்பேன்...!
பட்டு மேனி மெத்தையிட்டு உடன்
சேர்ந்திருப்பேன்...!
உறங்கும் போது அருகிலிருந்து மூச்சுகாற்றை
சேகரித்திருபேன்...!
கண்ணீருக்கு ஆறுதலாய் என்னையே
கொடுத்திருப்பேன்...!
கை நிறைய வளையலிட்டு மெல்லிசை
கேட்டிருப்பேன்!...
மகாராணி போல் நான் அவளை
மதித்திருப்பேன்...!
மனமுவந்து என்னை அவள் மணமுடித்திருந்தாள்