கவிக்குயில்கள்: November 2010

S

முதல் காதல்; கடைசி தோல்வி

உன் வழியோடு நான் காத்திருக்க
நீ பாதை மாறிப் போனதென்ன!
உன்னைத் தேடி பயணப்பட்ட என்
கண்கள் முற்புதரில் விழுந்ததென்ன!!

காய்க்கா மரக் கிளைகள் இருந்தென்ன
பயன்; உன்னை நினைக்கா என் மனம்
இறந்தால் தான் புரியும் அது
உண்மை காதலென்று!!!

சுழன்று வந்த சூறாவளியை எதிர்த்து
நின்ற தேகம்! நீ மறுத்துவிட்ட கனம்
உடைந்து சிதறிய நெஞ்சம்!! - உன்
வழி நான் தொடர

விருப்பமில்லை; இருந்தும் உன் விழிகள்
மறக்க முடியவில்லை இப்படி ஒரு
பிறவி ஏன் பிறந்தேன் - நான்
இறந்த பின் எரித்துவிட கேட்கின்றேன்

முன்னதாக அவளிடம் புதைந்து விட்ட
என்னுடலை!! - அவளிடம் ஒன்று மட்டும்
கேட்கிறேன் மறந்து விட்ட காதலை உன்னால்
மறைக்க முடியுமா யென்று!!!

உன்னை மறந்து விட்டேன்

தினம் தினம் கனவினில் சிலையாய் வருவது
நீ தானே!! உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
உள்ளுக்குள்ளே ஓர் உணர்வு

காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை
மறந்து விட்டேன் என்று!!

எதற்காகவோ என்னை அழைத்தாய் என்
கைபேசியில்! யாருடானோ பேசுவது போல்
பேசினேன்!!

காதலை பற்றி இருவருமே பேசவில்லை - அதை
நீ மறந்துவிட்டது எனக்கு புரிந்தது; தொடர்ந்து
பேச முடிய வில்லை!!

உன் அழைப்பை தவிர்க்கவும் நினைக்கவில்லை 
எதற்க்காக என்னை அழைத்தாய்; நிலை
தடுமாறி அழையவைத்தாய்!!

உறக்கத்தை விழுங்கிய ராத்திரிகள் தினமும்
காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை

மறந்து விட்டேன் என்று!!