கவிக்குயில்கள்: September 2010

S

அன்பிற்காக

நினைத்துப் பார்ப்பாயா நாள் ஒன்றுக்கு
ஒரு முறையேனும் என்னை...

தேடி பார்க்கின்றேன் நீ நினைவில்
இல்லாத நாட்களை என்னுள்ளே...
நம் அறிமுகம் இல்லாத நாட்களே அவை...!

நித்தம் உன் நினைவுகள் தான் அன்பே
நிஜமாய் சொல்கின்றேன்
உனக்காகத் தான் வாழ்கின்றேன்...

அன்று!...
உன் நினைவுகளுடன் ஆற்றங்கரையில்
மாலைப் பொழுதை
கழித்திருக்கின்றேன்...!

இன்று...!
ஆற்றங்கரையோற மரக் கிளிகள் கேட்டது
எங்கே அவள் என்று!
அவற்றிக்கு தெரியாது நீ பிறிந்து போனது....

என் நிலை இன்று மாறிப்
போனதோ? - நம்மில் பிழை யாரிடம்
என்பதில்லை!

உன் அம்மாவிற்காக நீ - உன்
அன்பிற்காக நான்...!

மழலை

உன்னை நான் பெற்றெடுக்க என்ன தவம்
செய்தேனோ? தாய்மை என்பதே பெண்
பிறவியின் பெருமை தானே அதை உன்னால்
அடைந்தேன்...!

மகனே நீ வாழ்க பல்லாண்டு, உன் மழலை
மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. சின்ன சின்னதாய்
இம்சைகைகள் செய்து

தவழ்ந்து கொண்டே ஓடி மறையும் உன்
சுட்டி வேலைகள் தாழாமல் நான் பொய்
கோபம் கொண்டு உன்னை மிரட்ட
என்னவென்றே

புரியாமல் என்னை பார்த்து மலர் மொட்டு
கண்களோடு நீ சிரிக்கையில் என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. இனியும் ஒரு
இன்பம்

வேண்டாம் உன்னை தவிர - இன்ப கடலில்
மூழ்கி நான் கண்டெடுத்த முத்தே
உன் சுவத்தில் என் மூச்சும் கலந்திருக்கும் உன்
ஆசைகளில்

என் அனுபவமும் உடன் இருக்கும் -இனி ஒரு
பிறவி இருப்பின் அதிலும் நீ என் மகனாக
பிறக்கும் வரம் வேண்டும் -
உன் மழலை

மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை!!!