கவிக்குயில்கள்: பட்டொளி வீசி பறக்கட்டுமே

S

பட்டொளி வீசி பறக்கட்டுமே

தேசம் பிழைத்தது நமக்கு புது நேசம் கிடைத்தது!! -
கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை மந்திரம் கொண்டு
மூவர்ணக் கொடி பாதி வானில் பறக்கும் அழகு பாரீர்

என் பாரத தாய் மூவர்ண சேலை கட்டி
ஒய்யாரமாய் பாரத புகழ் பாட ஆழ்கடல்
சங்கொன்று முழங்குது பாரீர்!!!

காவி நிறம், தூய்மையையும் கடவுளையும்
வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும்
பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும்

எடுத்துரைத்து வர்ணகொடி ஏருது பாரீர்....
அர்த்தமில்லா வெள்ளையன் கொடி இறங்குது பாரீர்
வெள்ளை புழுக்களை ஓட ஓட சுட்டெரித்த

சூரியன் பாரதியும், அகிம்சை கொண்ட காந்தி மகானும்;
ஆங்கிலவனை எதிர்த்து எதிர் வணிகம் செய்த
கப்பலோட்டிய தமிழனும் பாரத தாயின்

ஒற்றை பிரசவ பிள்ளைகள்; அது மட்டுமா
பஞ்சாப் சிங்கன், தமிழ்நாட்டில் திருப்பூர் குமரனும்
அவளுக்கு சுக பிரசவம் தான் - இவர் தம்

முயர்ச்சிதனில் பெற்று வந்த பேறு நம் தேசிய
கொடி பட்டொளி வீசி பறக்கட்டுமே சுதந்திரமாய்!!
பெற்ற சுதந்திரத்தை காத்திடுவோம் நிரந்திரமாய்!!!

1 comment: