என் காதலா என்றுரைத்த வார்த்தைகள் இன்றும்
ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது - உன்னை பார்த்த
நாட்களை விட உன்னுடன் பேசிய வார்த்தைகள் அதிகம்
என் செல்பேசிக்கு தெரியும் அந்த மணி கணக்கு!!!
நாளொரு பொழுதாய் என்னை விட என் செல்பேசி அதிகம்
எதிர் பார்த்தது உன் அழைப்பு மணி ஒழிக்க.
பூவிதழ் விரிந்த வார்த்தைகள், தாமரையாய் மலர்ந்த முகம்
பார்க்க துடித்த கண்கள் பழகிப்போன பாசைகள் மிச்சம் வைத்த
முத்தங்கள் தலைகோதும் விரல்கள்...அடடா
"பார்க்கணும் போல இருக்குனு" அழுது கொண்டே சொன்னாயடி
அன்று பார்த்திருந்தால் இன்று பிரிந்திருபோமா? - விழிகளில்
வழியும் கண்ணீரை தடுக்க முடியவில்லை...இன்னும் அழுது
கொண்டு தான் இருக்கின்றேன்!!! - அன்புள்ள காதலியே
கண்ணீரில் மிதந்தாயடி காற்றோடு கரைந்தாயடி கனவினில்
நிலைத்தாயடி ஆறுதல் சொல்ல யாரும் இல்லை...
எதற்காகவோ அன்று நீ சொன்ன "அழாதே உனக்காக
நானிருக்கையில்" எனும் வார்த்தைகளே இன்று ஆறுதலாய்!!!
cute lines..........i think u get more confident so u explose above lines.
ReplyDeletesemaaaya iruku.......really i enjoyed these lines...
ReplyDelete