கவிக்குயில்கள்: தமிழா! தமிழா!

S

தமிழா! தமிழா!

கல்லுக்கு உளி கொண்டு
வலி கொடுப்போம் - சிலை ஒன்றை
வடித்தெடுப்போம்!

சொல்லுக்கு கவியென்று பெயர்
கொடுப்போம் - கரு மை
கொண்டு எடுத்துரைப்போம்!

வயல் சேர் கொண்டு கால் நனைப்போம்
வலக் கரம் கொண்டு சோறெடுப்போம்!
நற் சொல்லொன்று கூறிடுவோம் - சங்கே
முழங்கென்று பாடிடுவோம்!

செம்மொழியாம் எம்மொழி தங்கத் தமிழன்
நாமென்று பாடிடுவோம்!
பாரதி; கண்ணதாசனும் கம்பனும் எம் நாடென்று
நா மணக்க நாம் உரைத்திடுவோம்!

கமகமக்க வாய்ருசிக்க வந்தோர்க்கு விருந்தொன்று,
படைத்திடுவோம் எந்நாடென பிறநாட்டவர் கேட்டால் - நாம்
வாழ்வது தமிழ் நாடென
மார் நிமிர்த்தி சொல்லிடுவோம்!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment