கவிக்குயில்கள்: மரணமென்ற தூது வந்தது....

S

மரணமென்ற தூது வந்தது....


இதயம் திருடியவளின் இனிய நினைவுகளை
நெஞ்சினில் சுமற்பதற்க்கு சுமையேதுமில்லை!
முகம் பார்த்து நான் பேச நிலம் பார்த்து நீ பேச
நடந்தேரிய முதல் சந்திப்பு, உன் விரல்
தொட்ட முதல் ஸ்பரிசம், காலத்தால் அழிக்க முடியாத
சுகமான நினைவுகளே!

நீயில்லா யென் வாழ்வில் காதல் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன் - மனதிற்குள் மணவாழ்வு கண்ட
காதல் இறந்து விடவில்லை நான் மறுமணம்
செய்துகொள்ள!!., உடனில்லாமல் போனாலென்ன
உயிரினில் இருக்கிறாய் - உடல்களுக்கு தான்
இந்த இடைவெளி!

உயிரினில் கலந்த காதல் காற்றாய், கடலாய், நிலமாய்
நெருப்பாய் வானமாய் பறவிக்கிடக்கையில் உன்னையேன்
நான் மறக்க நினைப்பேன்! - கண்களை தொலைத்துவிட்ட
பாதையில் வெளிச்சமின்றி பயணிக்கின்றேன் - நீயே
எனக்கு வழித்துணையாய்.!., தூக்கி எறிந்தயென் காதலை
தூசிதட்டிப் பார் உண்மை காதல் உனக்கு புரியும்!

மறந்துவிட சொன்னவள் காதலையேன் எனக்குள்
தரவேண்டும்! உன் நினைவுகளை அழித்து
என் இதயத்தை திருப்பிக் கொடு
மறந்துவிடுகின்றேன்!! பூ இதழ் விழிகள் எதிர் நின்று
மவுனப்புன்னகை மொழி பேசி உன் வலக்கரம் நீட்டி
துளி விசம் கொடு ஏற்றுக்கொள்கின்றேன்

வலியால் துடிக்கின்றேன் வழியின்றி தவிக்கின்றேன்!
உனக்காக இறந்துவிட நினைக்கிறேன்!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment