கவிக்குயில்கள்: ஆறுதலாய் - நினைவுகள்

S

ஆறுதலாய் - நினைவுகள்


பிரிந்தவள் மகிழ்வுடன் இருப்பாள் என்றிருந்தேன்
மனமொடிந்து போயிருந்தாள்! - காரணம்
புறியவில்லை! ஏனென்று கேட்டதும் அவள்
கண்ணீரில் பதில் சொன்னாள் - இருந்தும்

எனக்காக அழுகின்றாளா அல்லது என்னால்
அழுகின்றாளா எனவும் புறியவில்லை
இன்னமும் நேசிக்கின்றேன் யென்று எனது
கண்ணீர் துளிகள் காட்டிக்கொடுத்தது -  

காலப்போக்கில் பயணம் தொடர்ந்து இருவேறு 
பாதையில் சென்றுவிட்டோம் - இனி 
தொடறாது பழைய நிகழ்வுகள்....!

என்றும் அவள் மகிழ்ந்திருக்க வேண்டுகின்றேன்
வாழ்வு செழிக்க பிரார்த்திக்கின்றேன்! அவளின்
சோகமான தருணங்களில் என் நினைவுகள் ஒரு கணம்
அவளுக்கு ஆறுதல் தரட்டும் தோழமையுடன்...!

1 comment: