கவிக்குயில்கள்: பிரியமான தோழிக்கு

S

பிரியமான தோழிக்கு

தோழமை கண்டது மனதினில் நின்றது!
முகம் பார்த்ததில்லை நிறம் அறிந்ததில்லை,
நட்பென்ற வானில் பறந்து வந்த பறவை இந்த
பூவன சோலையில் வந்து குடியேறியதென்ன!

மகிழ்வித்து பேசி அழுகையைக் கூட நிறுத்தியிருக்க்றாய்
அன்பென்னும் ஆயுதம் வீசி!. அன்பிற்க்கு நிகர்
அம்மா என்றால் நட்பிற்க்கு நிகர் நீதான் தோழி!
எதிர் பாலாயிருந்தும் சிறு சீண்டல் கூட இல்லை!

காரணம் நட்பென்ற நன்நெறி வகுத்து
நடந்து செல்லும் நம் பாதை!
வாழ்வில் நல்லதொறு உறவு உண்டெனில் அது உன்
நட்பு தான் தோழி!

வெண்னிலா புன்னகை கொண்ட முழுமதியாய் நின்று
கோபத்தை கூட தூக்கி எறிந்தவள் தோழி நீ தானடி!
ஆறுதலாய் ஆயிரம் வார்த்தைகள் கூறும் உன் அன்பு
அள்ளியணைத்து மடிமீதிட்டு தாழாட்டும் அன்னையை போல

மகிழ்வுடன் வாழ்கின்றேன் தோழி உன் நட்புடன்!
சிறு குழந்தையாய் நீயிருந்து குழந்தை போலென்னை
மாற்றி மகிழ்வது தான் உன் சிறப்பு தவறுகள் மறைப்பதற்கும்
மன்னிப்பதற்கும் இங்கு இடமில்லை சொல்லி திருத்தி நல்வழி
நடத்துவது உன் அழகான நட்பு!

மணமாலை தோழ் சேர காத்திருக்கும் மனிக்கொடியே
உன் மனம் போல் மன்னவன் வந்தமைய ஆண்டவன்
அருள் புரியட்டும்!

நல்லதொரு நாளாய் இன்று பிறந்த நாள் கானும் நீ
இன்முகமாய் என்றும் வழ்க வளமுடன் யென வாழ்த்தும்
உன் இனிய தோழமை!




2 comments: