கவிக்குயில்கள்: மழலை

S

மழலை

உன்னை நான் பெற்றெடுக்க என்ன தவம்
செய்தேனோ? தாய்மை என்பதே பெண்
பிறவியின் பெருமை தானே அதை உன்னால்
அடைந்தேன்...!

மகனே நீ வாழ்க பல்லாண்டு, உன் மழலை
மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. சின்ன சின்னதாய்
இம்சைகைகள் செய்து

தவழ்ந்து கொண்டே ஓடி மறையும் உன்
சுட்டி வேலைகள் தாழாமல் நான் பொய்
கோபம் கொண்டு உன்னை மிரட்ட
என்னவென்றே

புரியாமல் என்னை பார்த்து மலர் மொட்டு
கண்களோடு நீ சிரிக்கையில் என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. இனியும் ஒரு
இன்பம்

வேண்டாம் உன்னை தவிர - இன்ப கடலில்
மூழ்கி நான் கண்டெடுத்த முத்தே
உன் சுவத்தில் என் மூச்சும் கலந்திருக்கும் உன்
ஆசைகளில்

என் அனுபவமும் உடன் இருக்கும் -இனி ஒரு
பிறவி இருப்பின் அதிலும் நீ என் மகனாக
பிறக்கும் வரம் வேண்டும் -
உன் மழலை

மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை!!!

2 comments:

  1. nice line...........i read many time this line ; i give my tears 2 u because u have lovely son and truely friend '

    ReplyDelete