கவிக்குயில்கள்: உன்னை மறந்து விட்டேன்

S

உன்னை மறந்து விட்டேன்

தினம் தினம் கனவினில் சிலையாய் வருவது
நீ தானே!! உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
உள்ளுக்குள்ளே ஓர் உணர்வு

காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை
மறந்து விட்டேன் என்று!!

எதற்காகவோ என்னை அழைத்தாய் என்
கைபேசியில்! யாருடானோ பேசுவது போல்
பேசினேன்!!

காதலை பற்றி இருவருமே பேசவில்லை - அதை
நீ மறந்துவிட்டது எனக்கு புரிந்தது; தொடர்ந்து
பேச முடிய வில்லை!!

உன் அழைப்பை தவிர்க்கவும் நினைக்கவில்லை 
எதற்க்காக என்னை அழைத்தாய்; நிலை
தடுமாறி அழையவைத்தாய்!!

உறக்கத்தை விழுங்கிய ராத்திரிகள் தினமும்
காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை

மறந்து விட்டேன் என்று!!

1 comment:

  1. Hai!!! Friend, thanks for all the ways you make this lines world seem a little more like heaven.

    ReplyDelete