கவிக்குயில்கள்: அப்படி என்ன மாயம் செய்தாயடி...!?

S

அப்படி என்ன மாயம் செய்தாயடி...!?


உன் பெயரை எழுதிவைத்த இடமெல்லாம்
பூக்களாய் முளைக்குதே

உன் பெயரில் அப்படி என்ன மாயம்
செய்தாயடி...!?

பூக்களுக்கு கூட பொறாமை தான் உன்
புன்னகையை பார்க்கும் பொழுது....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் புன்னகையில்

வெட்கத்தால் உன் முகம் சிவக்கும் போது,
மருதாணி கூட உன்னை கண்டு
இன்னும் சிவக்கின்றதே....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் வெட்கத்தில்

உன் இதழ்களில் நான் அள்ளிப்பருகிய முத்தம்
தித்திப்பாய் என் இதழ்கள் மீண்டும் வேண்டும்
என்று கேட்கின்றதே....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் செவ்விதழ் முத்தத்தில்...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment